பாஜக ஆட்சியை பிடிக்காமல் இருக்க எதுவும் செய்வேன்: ராகுலை சந்தித்த ஜிக்னேஷ் பேட்டி

பாஜக ஆட்சியை பிடிக்காமல் இருக்க எதுவும் செய்வேன்: ராகுலை சந்தித்த ஜிக்னேஷ் பேட்டி
பாஜக ஆட்சியை பிடிக்காமல் இருக்க எதுவும் செய்வேன்: ராகுலை சந்தித்த ஜிக்னேஷ் பேட்டி
Published on

குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க எதுவும் செய்ய தயார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ராகுல்காந்தி தெற்கு குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனிடையே சூரத் நகரில் நேற்று ராகுல்காந்தியை, தலித் தலைவர் ஜிக்னேஷ் சந்தித்தார். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிக்னேஷ், காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணியில் இணையும் திட்டமில்லை என்பதை மீண்டும் தெரிவித்தார். இருப்பினும், ராகுல்காந்தி தன்னுடைய 90 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளதாகவும், தலித் விரோத போக்கை கடைபிடித்து வரும் பாஜக கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்காமல் இருக்க எதுவும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com