“எதற்காக சஸ்பெண்ட் செய்தார்கள் என தெரியவில்லை”- கராத்தே தியாகராஜன்

“எதற்காக சஸ்பெண்ட் செய்தார்கள் என தெரியவில்லை”- கராத்தே தியாகராஜன்
“எதற்காக சஸ்பெண்ட் செய்தார்கள் என தெரியவில்லை”- கராத்தே தியாகராஜன்
Published on

காங்கிரஸ் கட்சியிலிருந்து எதற்காக தன்னை சஸ்பெண்ட் செய்தார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். இவரை தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. கட்சிக்கு எதிரான தொடர் நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சியிலிருந்து எதற்காக தன்னை சஸ்பெண்ட் செய்தார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். பல முறை தன்னை காங்கிரஸில் இருந்து இடை நீக்கம் செய்யதுள்ளனர் என தெரிவித்துள்ள கராத்தே தியாகராஜன் ராகுலை எதிர்த்து தான் பேசவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸில் இருந்து தன்னை நீக்கியது கட்சிக்குள் இருந்த அழுத்தமா அல்லது வெளியில் இருந்த அழுத்தமா என தெரியவில்லை என்றும் கராத்தே தியாகராஜன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com