"அடுத்தாண்டும் சிஎஸ்கேவை தோனி வழி நடத்துவார்" - காசி விஸ்வநாதன்

"அடுத்தாண்டும் சிஎஸ்கேவை தோனி வழி நடத்துவார்" - காசி விஸ்வநாதன்
"அடுத்தாண்டும் சிஎஸ்கேவை தோனி வழி நடத்துவார்"  - காசி விஸ்வநாதன்
Published on

2021 இல் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவை தோனி வழி நடத்துவார் என தான் நம்புவதாக அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

"டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள காசி விஸ்வநாதன் "2021 ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை தோனி வழி நடத்துவார் என உறுதியாக நான் நம்புகிறேன். சிஎஸ்கேவுக்கு மூன்று ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை பெற்றுத் தந்த கேப்டன் அவர். இந்தாண்டுதான் சிஎஸ்கேவால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற முடியவில்லை. ஐபிஎல் வரலாற்றில் இதுபோல வேறு எந்த அணியும் செய்ததில்லை. இந்தாண்டு மோசமாக இருந்ததன் காரணமாக ஒட்டுமொத்தமாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என அவசியமில்லை" என்றார்.

மேலும் "எங்களுடைய முழு திறனையும் கொண்டு இந்தாண்டு விளையாடவில்லை. வெற்றிப்பெற வேண்டிய போட்டிகளில் தோற்று இருக்கிறோம். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாததால் அணியின் பேலன்ஸ் சற்றே தடுமாறியது. அதேபோல சிஎஸ்கேவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு கொஞ்சம் வருத்தத்தையும் கொடுத்தது" என்றார் காசி விஸ்வநாதன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com