திமுக ஆட்சிக்கு வந்தால் 40 பேருக்கு அரசு வேலை: நாமக்கல் திமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்தால் 40 பேருக்கு அரசு வேலை: நாமக்கல் திமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்தால் 40 பேருக்கு அரசு வேலை: நாமக்கல் திமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு
Published on

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரின் சர்ச்சை பேச்சு, திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவை சேர்ந்த 40 பேருக்கு உறுதியாக அரசு வேலை வாங்கித் தரப்படும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது வேட்பாளரின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் கண்டிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவை சேர்ந்தவர்கள், நிர்வாகிகள் என 40 பேருக்கு அரசு வேலை வாங்கித் தரப்படும். அதோடு கூட்டுறவு சங்கங்களின் பொறுப்புகள் வாங்கி தரப்படும் என்று பேசினார்.

இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அரசு வேலையை தங்கள் கட்சிக்காரர்களுக்கு தான் என பேசியது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com