“பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானது காங். தேர்தல் அறிக்கை” - நிர்மலா சீதாராமன்

“பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானது காங். தேர்தல் அறிக்கை” - நிர்மலா சீதாராமன்
“பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானது காங். தேர்தல் அறிக்கை” - நிர்மலா சீதாராமன்
Published on

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

காங்கிஸ் கட்சி நேற்று தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும், தேசத்துரோக சட்டம் நீக்கப்படும், ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மீது நிர்மலா சீதாராமன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “பாதுகாப்பு படை சிறப்பு அதிகார சட்டத்தை நீர்த்துப் போக செய்வது நாட்டின் பாதுகாப்பு அமைப்பை ஆபத்திற்கு உள்ளாக்கும். இது சரியா?. இது ஆயுதப் படையை பலவீனப்படுத்தும் முயற்சி. 

மாவட்ட ஆட்சியர்களின் அதிகாரங்களை குறைக்க காங்கிரஸ் விரும்புகிறது. தேசத்துரோக சட்டத்தை நீக்கவும் அக்கட்சி விரும்புகிறது. தேசத்தின் நலன் சார்ந்த தேர்தல் அறிக்கை அல்ல இது. தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவான அறிக்கை” என்று கூறினார். 

அத்துடன், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை பாஜக நிச்சயம் திரும்ப பெறாது என்பதை நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com