ஆறுகுட்டி தானாகவே இணைந்தார், தானாகவே விலகினார்: ஓபிஎஸ் கருத்து

ஆறுகுட்டி தானாகவே இணைந்தார், தானாகவே விலகினார்: ஓபிஎஸ் கருத்து
ஆறுகுட்டி தானாகவே இணைந்தார், தானாகவே விலகினார்: ஓபிஎஸ் கருத்து
Published on

தங்கள் அணியில் தானாகவே இணைந்த சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, இப்போது தானாகவே ‌விலகிச் சென்றுவிட்டதாக முன்னாள் முதலமைச்சர்‌ ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டிக்கு தங்கள் அணியில் உரிய மரியாதை கொடுக்கப்பட்டதாக கூறினார். 

தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என ஒபிஎஸ் அணி மீது புகார் தெரிவித்திருந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தனது தொகுதிக்குட்பட்ட மாங்கரை பகுதி‌ மக்களிடம் தான் எந்த அணியில் இணையவேண்டும் என்பது குறித்து கருத்து‌களை கேட்டு வருகிறார். 

இதனிடையே கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‌ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து பிரிந்த சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தங்கள் அணிக்கு வந்தால் அவரை ஏற்றுக் கொள்வோம் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com