பதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்

பதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்
பதவியேற்புக்கு நேரில் அழைத்த ஜெகன் - வீணை பரிசளித்த கேசிஆர்
Published on

பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு, ஜெகன் மோகன் ரெட்டி நேரில் அழைப்பு விடுத்தார்.

ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன், சட்டசபைக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இதனையடுத்து, வருகின்ற மே 30ம் தேதி ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கிறார். 

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க சந்திரசேகர் ராவுக்கு, ஜெகன் மோகன் ரெட்டி இன்று நேரில் அழைப்பு விடுத்தார். ஹைதராபாத்தில் உள்ள கேசிஆர்-ன் பிரகதி பவனுக்கு வருகை தந்த ஜெகனுக்கு, கேசிஆர் குடும்பத்தினர் மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். சந்திரசேகர் ராவ் பழக்கூடை மற்றும் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். 

இந்தச் சந்திப்பு சில நிமிடங்கள் நடைபெற்றது. அப்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு வீணைய பரிசாக அளித்தா சந்திரசேகர் ராவ். மே 30ம் தேதி விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நரேந்திர மோடிக்கும் அவர் அழைப்பு விடுக்க உள்ளார். நாளை இதற்காக டெல்லி செல்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com