ஏர்போர்ட்டில் அமித் ஷா கூட்டம்: காங்கிரஸ் கண்டனம்

ஏர்போர்ட்டில் அமித் ஷா கூட்டம்: காங்கிரஸ் கண்டனம்

ஏர்போர்ட்டில் அமித் ஷா கூட்டம்: காங்கிரஸ் கண்டனம்
Published on

கோவா ஏர்போர்ட்டில் பா.ஜ.க பொதுக்கூட்டம் நடைபெற்றதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
கோவா ஏர்போர்ட்டில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அமித் ஷாவை வரவேற்க பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டம் பலத்த பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றது. இதில் மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், அமித் ஷா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துக் கொண்டனர். கட்சி கூட்டத்தை ஏர்போர்ட்டில் நடத்தியதற்கு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதுதான், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் முறை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம் எனவும் இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com