அதிமுகவின் 3 அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பு

அதிமுகவின் 3 அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பு
அதிமுகவின் 3 அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பு
Published on

அதிமுகவில் எதிரும் புதிருமாக உள்ள மூன்று வெவ்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் சென்னை விமானநிலையத்தில் சந்தித்துக்கொண்டு சிறிது நேரம் உரையாடினர்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், அதிமுக அம்மா அணியின் விஜயபாஸ்கர் மற்றும் டிடிவி தினகரனின் ஆதரவாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர். விஐபிக்கள் காத்திருப்பு அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அணிகள் இணைப்பு குறித்து அவர்கள் பேசிக்கொண்டதாகத் தெரிகிறது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்காக, அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 60 நாட்கள் அவகாசம் வழங்கி, தான் ஒதுங்கியிருந்ததாகவும், ஆனால், அவர்களால் இணைக்க முடியவில்லை என்று கூறியிருந்தார். அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் தினகரன் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com