ரயில் பயணியிடம் சிக்கிய 8.8 கிலோ தங்க நகைகள்: ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

ரயில் பயணியிடம் சிக்கிய 8.8 கிலோ தங்க நகைகள்: ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

ரயில் பயணியிடம் சிக்கிய 8.8 கிலோ தங்க நகைகள்: ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
Published on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 8.8 கிலோ தங்க நகைகள், ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது. வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக உரிய ஆவணமில்லாமல் ரயில் மூலம் கொண்டுவரப்படும் நகை, பணத்தை ரயில்வே பாதுகாப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அதை துறைமுகம் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயிலில் வந்து இறங்கிய பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் 8.8 கிலோ தங்க நகைகள் இருந்தது.

அவரிடம் நடத்தி விசாரணையில் அவர் பெயர் திலீப்குமார் என்பதும் நகைகளை கஜானா ஜூவல்லரிக்கு கொண்டு செல்வதாகவும் தெரிய வந்தது. ஆனால் நகைக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாததால் பறிமுதல் செய்த தங்கத்தை துறைமுகம் தொகுதி தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகள் நேரில் வந்து 2 மணிநேரம் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பிறகு வருமானவரித்துறை அதிகாரிகள் 8.8 கிலோ தங்க நகைகளை கைப்பற்றி துறைமுகம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

தங்க நகைகளை அரசு கருவூலகத்தில் ஒப்படைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com