டெக்
தொடங்கியது சூரியனை நோக்கிய கனவுப் பயணம்: விண்ணில் சீறிப்பாய்ந்தது ஆதித்யா எல்1 விண்கலம்
இந்தியாவின் சூரியனை ஆய்வு செய்யும் கனவு திட்டமான ஆதித்யா L1 விண்கலம் பிஎஸ்எல்வி C-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11 50க்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவின் சூரியனை ஆய்வு செய்யும் கனவு திட்டமான ஆதித்யா L1 விண்கலம் பிஎஸ்எல்வி C-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11 50க்கு விண்ணில் ஏவப்பட்டது.
பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுன்டவுன் நேற்றே தொடங்கப்பட்டு எரிபொருள் நிரப்பும் பணிகள் அனைத்தும் நிறைவுற்றன. 1485 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் 109 நாட்களில் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியை அடைய உள்ளது. இதில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் உள்ளன.
ராக்கெட் விண்ணில் பாய்ந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் விண்ணில் நிலைநிறுத்தப்படும். ராக்கெட் விண்ணில் பாய்வதை காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் பலவும் செய்யப்பட்டன.