நிலவில் தண்ணீர் இல்லை என்பது பொய்!

நிலவில் தண்ணீர் இல்லை என்பது பொய்!
நிலவில் தண்ணீர் இல்லை என்பது பொய்!
Published on

நிலவில் தண்ணீர் இல்லை என்று நாம் இதுவரை நம்பி வந்த கருத்தை பொய்யாக்கும் விதமாக அங்கு தண்ணீர் உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நிலவு வறட்சியானது, தரிசாகிய கோளம் போன்றது என்ற நம் எண்ணங்கள் தற்போது பொய்யாகியுள்ளன. நிலவில் பெரிய அளவில் தண்ணீர் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அப்பல்லோ விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு சென்றபோது அங்கிருந்து எடுத்துவரப்பட்ட மாதிரிகளின் மூலம் அங்கு நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிலவில் உள்ள நீர் வருங்காலத்தில் விண்வெளி ஆய்வாளர்களின் தாகத்தை தணிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலவின் உட்பகுதியில் பனிக்கட்டியாக நீர் உறைந்திருப்பதாகவே ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

நிலவின் வறட்சியானது உயிர்கள் வாழ ஏற்றதல்ல என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது உயிர்கள் வாழ்வதற்கு மிக முக்கிய ஆதாரமான தண்ணீர் அங்கு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு உள்ள நீரை வருங்காலத்தில் விண்வெளி ஆய்வாளர்கள் நிலவு குறித்து ஆய்வு செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com