“கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியவில்லையே”- விரக்தியில் இளைஞர் தற்கொலை..!

“கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியவில்லையே”- விரக்தியில் இளைஞர் தற்கொலை..!

“கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியவில்லையே”- விரக்தியில் இளைஞர் தற்கொலை..!
Published on

கடனை திரும்ப பெற முடியாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சென்னை ஆவடி அடுத் திருமுல்லைவாயல் வெங்கடாசலம் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் .இவரது மகன் செல்லதுரை (32).இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமுல்லைவாயலில் உள்ள தனியார் ஓட்டலில் கேசியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் செல்லதுரை ஓட்டல் உரிமையாளர் குமார் என்பவருக்கு ரூபாய் 15 லட்சம் பணத்தை கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியவில்லை. இதனால் மனமுடைந்த இவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமுல்லைவாயல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம் பணிபுரியும் ஓட்டல் உரிமையாளருக்கு கொடுத்த கடனை திரும்ப பெற முடியாததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com