“கைதி திருவேங்கடத்தை கை விலங்கு போடாமல் அழைத்துச் சென்றது ஏன்?” – செல்லூர் ராஜூ கேள்வி

“ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருவேங்கடத்திற்கு கை விலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு PT WEB
Published on

செய்தியாளர்: பிரசன்னா

முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள அவரது திருவருவுச் சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூகோப்பு புகைப்படம்

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது”

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது... “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய மரணம், கொலை, கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதில், எப்படி திமுகவினர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும்? சட்ட ஒழுங்கு இவ்வளவு சீர்கேட்டு இருக்கும்போது சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு ஈவிகேஎஸ்.இளங்கோவன் ‘திமுகவை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியாது’ என்று கூறுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்?

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
அண்ணாமலை படத்தை மாட்டி ஆடு வெட்டிய வழக்கு: “இது போன்ற விஷயங்களை ஏற்க முடியாது” – உயர்நீதிமன்றம்

“பெருந்தலைவர் ஆட்சியை கொடுத்தது அதிமுகதான்”

பெருந்தலைவர் ஆட்சியை கொண்டு வந்தது புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இருபெரும் தலைவர்களின் ஆட்சியை நிலைநாட்டியது புரட்சித்தலைவி ஜெயலலிதாதான். அதிமுக ஆட்சிதான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது.

எம்ஜிஆர்
எம்ஜிஆர்pt web

அதிமுக தோல்விக்கு என்ன காரணம்?

வேகாத வெயிலில் ஓட்டு கேட்டோம். ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா.? குறிப்பிட்ட சமுதாயம் தாங்கள் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக சிலர் மோடிக்கு வாக்களித்தனர். மற்றொருபக்கம் சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். இதில், அதிமுகவினர் நாங்கள் அடிபட்டு விட்டோம்.

பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம், பல இடங்களில் இரண்டாவது இடம் பெற்றோம். இது குறித்தும் ஆடியோ குறித்தும் பொதுச் செயலாளர் எதுவும் கூறவில்லை. ஆலோசனைதான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும் இல்லை. மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியும், தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல்தான்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
4 நாட்களில் 2 என்கவுன்டர்கள்: காவல்துறையின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையான திருவேங்கடம் யார்?

மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மதுரையில் சௌராஷ்டிரா அமைப்பினர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த வட மாநிலத்தவர்கள், பிராமின்ஸ் உள்ளிட்டோர் மோடிக்கு வாக்களித்தனர்.

 திருவேங்கடத்திற்கு ஏன் கை விலங்கு இல்லை?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்ற திருவேங்கடத்திற்கு கை விலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார் என காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இது போன்ற களங்கம் ஸ்டாலின் ஆட்சியில்தான் ஏற்படும்., கள்ளச்சாராயம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com