அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்

அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்
அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்
Published on

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டோம் என ஸ்டெர்லைட் நிறுவனத்தின், சிஇஓ பி.ராம்நாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பி.ராம்நாத் " 144 தடை உத்தரவை அரசிடம் பெற்று அதனை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டோம். பின்பு, அமைதி பேச்சுவார்த்தைக்கும் அழைப்புவிடுத்தோம். இப்போது ஸ்டெர்லைட் ஆலைய எப்போதும் போல இயங்கி வருகிறது. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com