செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மேலும் 500 கன அடி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மேலும் 500 கன அடி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மேலும் 500 கன அடி நீர் திறப்பு
Published on

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்திறப்பு படிப்படியாக உயர்த்தப்பட்டு அதிகப்படியாக 9000 கன அடிவரை உயர்த்தப்பட்டது. பின்பு ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால் நீர் திறப்பு 500 கன அடிவரை படிப்படியாக குறைக்கப்பட்டது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு விநாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியிலிருந்து நீர் திறப்பும் விநாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com