தூங்கிய பக்தர்கள் மேல் தண்ணீர் ஊற்றப்பட்டதா? சுவாமிமலை கோவிலில் நடந்தது என்ன? - அமைச்சர் விளக்கம்

சுவாமிமலை திருக்கோவிலில் தூங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி அவர்களை எழுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.
சேகர்பாபு
சேகர்பாபுபுதியதலைமுறை
Published on

சுவாமிமலை திருக்கோவிலில் தூங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றி அவர்களை எழுப்பிவிட்டதாக புகார் எழுந்தது. பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்றும் வைரலானது.

இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, விழாகாலங்களில் கோயில் வளாகங்களில் யாரும் தங்கக்கூடாது என்பது விதி இருப்பதாகவும், இரவு கோவிலின் நடை சாத்தும்முன்னர் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைப்பெற்றதாகவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com