கரும்புச்சாறு கடைக்கு B.E., B.Sc., படித்த பட்டதாரிகள் வேலைக்குத் தேவை – வைரலாகும் பேனர்!

திருச்செந்தூர் அருகே புதிதாக தொடங்க உள்ள கரும்புச்சாறு கடைக்கு பி.இ., பி.ஏ,, பி.எஸ்.சி., பட்டதாரிகள் வேலைக்கு தேவை என வைத்துள்ள பேனர் வைரலாகி வருகிறது.
கரும்பு சாறு கடையில் வைக்கப்பட்ட நூதன ‘வேலைக்கு ஆள் தேவை’ போஸ்டர்
கரும்பு சாறு கடையில் வைக்கப்பட்ட நூதன ‘வேலைக்கு ஆள் தேவை’ போஸ்டர்pt desk
Published on

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

தமிழகத்தில் தற்போது பல்வேறு தொழில்கள் பெருகி வரும் நிலையில், மக்களிடம் உடல் உழைப்பு குறைந்து வருகிறது. பெரும்பாலான தொழில்கள் இயந்திரமயமாகிவிட்ட நிலையில், இருக்கும் வேலையை பார்ப்பதற்கு வேலையாட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

கரும்பு சாறு கடையில் வைக்கப்பட்ட நூதன ‘வேலைக்கு ஆள் தேவை’ போஸ்டர்
கரும்பு சாறு கடையில் வைக்கப்பட்ட நூதன ‘வேலைக்கு ஆள் தேவை’ போஸ்டர்pt desk

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெய்ஞானபுரத்தில் புதிதாக தொடங்க உள்ள கரும்புச்சாறு கடை ஒன்றில் வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேனரில் “கரும்புச்சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை சம்பளம் ரூ.18 ஆயிரம், வேலை நேரம் காலை 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை என்று எழுதப்பட்டுள்ளது. கல்வி தகுதி பிஇ, பிஏ, பி.எஸ்சி என்றும், வயது வரம்பு 25 முதல் 40 வரை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கரும்பு சாறு கடையில் வைக்கப்பட்ட நூதன ‘வேலைக்கு ஆள் தேவை’ போஸ்டர்
‘கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?’ - திருச்செந்தூர் முருகனை காண படையெடுக்கும் திரைப்பிரபலங்கள்!

தொடர்பு கொள்வதற்கு கடை உரிமையாளர் தனது தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார். இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரும்பு சாறு கடையில் வைக்கப்பட்ட நூதன ‘வேலைக்கு ஆள் தேவை’ போஸ்டர்
மும்பை|Air India-ல் 2000 சுமைதூக்கும் பணியிடங்கள்; நேர்க்காணலுக்கு குவிந்த இளைஞர்களால் கூட்ட நெரிசல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com