வேலூர்: சிறுவனின் உடலில் சூடு வைத்து கொடுமை - தந்தையுடன் வாழ்ந்து வந்த பெண் கைது

வேலூர்: சிறுவனின் உடலில் சூடு வைத்து கொடுமை - தந்தையுடன் வாழ்ந்து வந்த பெண் கைது
வேலூர்: சிறுவனின் உடலில் சூடு வைத்து கொடுமை - தந்தையுடன் வாழ்ந்து வந்த பெண் கைது
Published on

8 வயது சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமை படுத்தியதாக அச்சிறுவனின் தந்தை உடன் வாழ்ந்து வந்த பெண்ணை கைது செய்து குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (35). இவரது மனைவி ஈஸ்வரி, இவர்களுக்கு சித்தார்த் (10), நித்திஷ் (8) ஆகிய இரு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தாயை இழந்த குழந்தைகளுடன் தந்தை சேட்டு வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த வேணி என்ற பெண்ணுடன் சேட்டுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. வேணி அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சேட்டு உடன் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில், முதல் மனைவியின் குழந்தைகளான சித்தார்த் மற்றும் நித்திஷ் ஆகியோரை வேணி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

நித்தீஷின் முதுகு, கை, கால்கள், பாதம், மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சூடு வைத்து சித்தரவதை செய்து வந்துள்ளார். இன்று காலை நித்திஷ் அவருடைய வீட்டில் இருந்து தப்பி அருகில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் நித்தீஷை, காவல் நிலையம் அழைத்து வந்து புகார் அளித்தர்.

உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் நித்திஷ் தந்தை சேட்டு மற்றும் வேணியை கைது செய்து குடியாத்தம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே விழுப்புரத்தில் திருமணத்தை மீறிய உறவு சர்ச்சையில் தான் பெற்ற பிள்ளையையே பெண் ஒருவர் கொடுமைப்படுத்திய வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com