விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு இரண்டு வார சிறை

விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு இரண்டு வார சிறை
விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு இரண்டு வார சிறை
Published on

நீதிமன்ற விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வார சிறை தண்டனை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையில் நீதிபதி உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில், வழக்கறிஞர் ஒருவர், பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதி தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் அமர்வு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சாதாரண சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், அந்த வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கில் உடனடியாக கைது நடவடிக்கை எடுத்த சிபிசிஐடி காவல் துறையினரையும் நீதிபதிகள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com