திருச்சி: பத்திரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - வெளியே வந்த பயணிகளை ஆரத்தழுவி வரவேற்ற உறவினர்கள்

திக் திக் நிமிடங்களை கடந்து, மீண்டும் சார்ஜாவுக்கு புறப்படாமல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை, அவர்களது உறவினர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர்.
Passenger
Passengerpt desk
Published on

செய்தியாளர்: சார்லஸ்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகளுடன் நேற்று மாலை சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து 23 முறை வானில் வட்டமடித்த விமானம், திக் திக் நிமிடங்களை கடந்து திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதன்பின் 108 பயணிகள், மாற்று விமானத்தில் மீண்டும் சார்ஜா புறப்பட்டனர்.

தரையிறக்கப்பட்ட விமானம்
தரையிறக்கப்பட்ட விமானம்pt desk

அதேநேரம், உடனடியாக சார்ஜா செல்ல விரும்பாத 36 பயணிகள், வீடு திரும்ப முடிவு செய்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை, உறவினர்கள், கட்டியணைத்து அழுதனர். ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய அவர்கள், 144 பேரின் உயிரைக்காத்த விமானிகள் குழுவுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Passenger
ரயில் விபத்து - நெஞ்சை உலுக்கும் ட்ரோன் காட்சிகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com