திருச்சி: கட்சி நிர்வாகிகளுடன் அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

திருச்சியில் விமான நிலையம் செல்லும் பேருந்தில் அமைச்சர் மகேஸ் 10 பயணிகளுக்கு டிக்கெட் எடுத்து பயணம் செய்தார்.
Minister Mahesh
Minister Maheshpt desk
Published on

செய்தியாளர்: வி சார்லஸ்

திருச்சி விமான நிலையத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதற்கு முன்னதாக திருச்சி பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையம் செல்வதற்காக டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து அரசு பேருந்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பயணம் செய்தார்.

Minister Mahesh
Minister Maheshpt desk

அப்போது தன்னுடன் பயணம் செய்த தனது கட்சி நிர்வாகிகள் பத்து பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ், டிக்கெட் எடுத்து பேருந்தில் அழைத்துச் சென்றார். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குரங்கம்மை தடுப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டார்.

Minister Mahesh
திருச்சி: சைனா நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி, உயிரிழந்த விவகாரம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையத்திற்கு பேருந்து வசதி துவக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com