திருச்சியில் காய்ச்சல் காரணமாக 364 பேர் அனுமதி

திருச்சியில் காய்ச்சல் காரணமாக 364 பேர் அனுமதி
திருச்சியில் காய்ச்சல் காரணமாக 364 பேர் அனுமதி
Published on

திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் 364 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர் ராசாமணி, இன்று காலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். முன்னதாக, மங்கம்மா நகர் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்த ஆட்சியர், சுற்றுப்புறத்தை தண்ணீர் தேங்காமலும்,‌ சுகாதாரமாகவும் வைத்திருக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பேசிய ஆட்சியர் ராசாமணி, கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்ததாக 39 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், சில நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com