“மிகவும் சுட்டியான குழந்தை சுர்ஜித்” - குழந்தையின் மாமா உருக்கம்

“மிகவும் சுட்டியான குழந்தை சுர்ஜித்” - குழந்தையின் மாமா உருக்கம்
“மிகவும் சுட்டியான குழந்தை சுர்ஜித்” - குழந்தையின் மாமா உருக்கம்
Published on

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் மிகவும் சுட்டித்தனம் கொண்டவன் என்றும், அதனால் தான் கிணற்றுக்குள் தைரியமாக இருப்பதாகவும் குழந்தையின் மாமா மரியதாஸ் தெரிவித்தார்.

புதிய தலைமுறையிடம் தொலைபேசி மூலம் பேசிய அவர், “குழந்தை நன்றாக இருப்பதை பார்த்தோம். குழந்தையிடம் பேசினோம். குழந்தை நாங்கள் சொல்வதை புரிந்துகொள்கிறான். நாங்கள் அசைய வேண்டாம் என்று கூறினோம். கண்ணில் மண் விழுமால் இருக்க கண்ணை மூடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினோம். குழந்தை 5 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றுக்குள் இருப்பதால் சோர்வடைந்துள்ளான். மிகவும் சுட்டித்தனமான குழந்தை அவன். அதனால் தான் இன்னும் தைரியமாக இருக்கிறான்” என்று உருக்கமாக கூறினார்.

முன்னதாக, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

கிணற்றுக்குள் குழந்தையின் கைகள், கால்கள் மடங்கிய நிலையில் உயிருக்கு போராடி வருவது காண்போரை கலங்கச் செய்துள்ளது. குழந்தையை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகாமையில் மீட்புக் குழுவினர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டினர். ஆனால் 15 அடியில் பாறை இருந்ததால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை 26 அடியில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இரண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தை மீட்கப்பட்ட உடனே சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸும், மருத்துவக் குழுவும் தயார் நிலையில் உள்ளன. 

மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் வருகை தந்துள்ளனர். தற்போது குழந்தையை கயிறு கட்டி அதன்மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மதுரையில் இருந்து மணிகண்டன் என்பவர், குழந்தையை மீட்பதற்காக பிரத்யேக கருவியை கொண்டு வந்துள்ளார். அதன்மூலம் குழந்தை தற்போது மீட்கப்பட்டு வருகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com