”சீமான் அவரது மனநிலையை சோதிப்பது நல்லது; தரமில்லாத அரசியல் நடத்தி வருகின்றார்” - அமைச்சர் கீதா ஜீவன்

கலைஞர் பற்றி சீமான் அவதூறு: சீமான் அவர் மனநிலையை சோதிக்க வேண்டும். நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது.. அரசியல் முதிர்ச்சிஇல்லாத ஒரு தலைவராக அவர் தெரிகின்றார்... அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்...!
அமைச்சர் கீதா ஜீவன் , சீமான்
அமைச்சர் கீதா ஜீவன் , சீமான்புதிய தலைமுறை
Published on

தூத்துக்குடி மாவட்டம் : கலைஞர் பற்றி சீமான் அவதூறு: சீமான் அவர் மனநிலையை சோதிக்க வேண்டும். நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது.. அரசியல் முதிர்ச்சிஇல்லாத ஒரு தலைவராக அவர் தெரிகின்றார்... அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்...!

அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதா ஜீவன்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி, டூவிபுரத்தில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், ”நாம் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் சீமான் கலைஞரை பற்றி இழிவாகவும், அவதூராகவும் பேசியதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது... தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காக கலைஞர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்தவர்.. மாற்றுத்திறனாளி, திருநங்கைகள், மகளிர், தொழிலாளர்கள் என அனைவர் வாழ்க்கையிலும் உரிமையை நிலைநாட்டியவர் கலைஞர் கருணாநிதி,

கலைஞர் பற்றி இழிவாக பேசுவது வன்மையாக திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிக்கிறது... கலைஞர் இறக்கும் போது சீமான் அவரை பற்றி புகழ்ந்தார்.. ஆனால் தற்போது தேவையில்லாமல் அவர் பேசி வருகிறார்.. கோடான கோடி தொண்டர்கள், தலைவரின் கண் அசைவிற்காக காத்திருக்கின்றார்கள்.. பொறுமையாக இருக்கின்றோம்... முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கின்றார் அதற்காக பொறுமையாக இருக்கின்றோம்..

சாட்டை துரைமுருகன் என்ற ஒருத்தர் ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசுகின்றார்.. திருச்சி ஐடி பிரிவைச் சேர்ந்தவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. இதற்கு கருத்துரிமை பறிக்கப்படுவதாக கூறுகின்றார் சீமான்,

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தேவன் பிள்ளை இல்லை என்றும், சாத்தான் பிள்ளைகள் என்றும் கூறி இருக்கின்றார்.. தூய்மை பணியாளர்களை தெலுங்கர் என்று கூறி இருக்கின்றார். இப்படி தொடர்ச்சியாக் சாதி, மத ரீதியாக பிரச்னைகளை உண்டாக்கும் கருத்துக்களை பேசி வருகிறார்.

எங்கள் கட்சி தலைவர் குறித்தான விமர்சனத்திற்காக சீமானை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது...

சீமான்
சீமான்ட்விட்டர்

சீமான் மனநிலையை அவர் சோதிக்க வேண்டும்... பெண் காவலர்களையும், உயர் அதிகாரிகளின் தவறான முறையில் பேசுகின்றார் ஒருவர் (சவுக்கு சங்கர்).. இதற்கு பெண் காவலர்கள் புகார் கொடுத்து இருக்கின்றார். அதற்கு வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது.. பெண் காவலர்களை தவறாக சொன்னவர்களை இவர் ஏற்றுக்கொள்கின்றாரா? என்று கேள்வி எழுப்பினார்...

கருத்துரிமை பறிக்கப்படுவதாக அவர் கூறுகிறார்..

தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை உபயோகப்படுத்தி பேசி பிரச்சனை உண்டாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்றார். இது ஏற்கத்தக்கதல்ல, எங்கள் தலைவர் பொறுப்பான முதல்வர், கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தி, கட்டுப்பாட்டோடு திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கின்றார்கள்...

சீமான் அவருடைய கட்சிக்கு இலங்கை தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி உலக அளவில் பல்வேறு வகையில் நன்கொடையாக பெற்று வருகின்றார்.. இலங்கையில் எப்படி ராஜபக்சேயை எதிர்க்கின்றானரோ அதே போன்று தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்க வேண்டும் என்று காட்டி கொள்வதற்காக திமுகவையும், திமுக தலைவர்களையும் அவர் பேசி வருகின்றார்....

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது.. அரசியல் முதிர்ச்சிஇல்லாத ஒரு தலைவராக அவர் தெரிகின்றார்... தமிழ் சமூகத்தை தவறான தகவல் மூலம் தவறாக வழிநடத்தி வருகின்றார் என்பதை கூறிக் கொள்கின்றேன். . பச்சோந்தி போல இன்று ஒன்று நாளை ஒன்று என பேசி வருகின்றார்.. தான் பேசியது என்னவென்று தெரியாமல் அவர் பேசி வருகின்றார்... அரசியல் தலைவருக்கு அவர் தகுதியானவர் அல்ல, அரசியல் பண்பற்றவர்.. தரமில்லாத ஒரு அரசியல் நடத்தி வருகின்றார்... எங்கள் தலைவரைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு அருகதை இல்லை...

எங்கள் தலைவர் பொறுப்பான ஒரு முதலமைச்சர்.. நாங்கள் ஆளுங்கட்சி, ஆகவே எங்கள் முதலமைச்சரின் கண் அசைவுக்கேற்ப எங்கள் கட்சி தோழர்கள், தொண்டர்கள் செயல்படுவார்கள்...

மேலும், சீமான் மீது புகார் அளித்தல் நடவடிக்கை எடுப்போம். ” என்றார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று அண்ணாமலை கூறியதற்கு?

குற்றச் செயல்களில் இன்று நேற்று தொடர்ச்சியாக நடைபெற்று வருவது.. 1967 க்கு முன்னர் இருந்து குற்றச்செயல்கள் நடந்து தான் வருகிறது... தொடர்ச்சியாக நடக்கிறது.. கலைஞர் பொறுப்பேற்ற பின்னர் தான் சட்டம், ஒழுங்கு சரி இல்லை என்று கூறி தவறான கருத்துக்களை கூறுகின்றார்கள்... கருத்தரிமை பறிக்கப்படுவதாக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்.. தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்று பாஜகாவா, நாம் தமிழர் கட்சியா என முன்னெடுத்து வருகின்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை... ஆகவே மக்கள் அவரை நிராகரித்து வருகிறார்கள்” என்றார்....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com