தமிழ்நாடு
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு போட்ட வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
2020-ஆம் ஆண்டு முதல் பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார் என்றும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை முன் வைத்துள்ளனர்.
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில் தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளில் கூட ஆளுநர் கையெழுத்திடவில்லை என வாதிட்டனர். 2020-ஆம் ஆண்டு முதல் பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார் என்று உச்சநீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்துள்ளனர். முழு விவரம் வீடியோவில்