திருவாரூர்: கணவர் உயிரிழந்த நிலையில் பிறந்த பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பெண்

திருவாரூர் அருகே கணவர் உயிரிழந்த நிலையில், பிறந்த பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் உட்பட 3 பெண்கள் மீது வலங்கைமான் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Police station
Police stationpt desk
Published on

செய்தியாளர்: மாதவன்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி . கூலி வேலைக்கு சென்று வந்த சுகந்தி கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து பிறந்து 11 மாதமே ஆன அந்த பெண் குழந்தையை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஆயிஷா நஷிமா என்பவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளார். சுகந்தியின் கணவர் இறந்துவிட்டதால், குழந்தையை விற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுகந்தியிடம் குழந்தை இல்லாமல் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் விசாரணை செய்து குழந்தையை மீட்டுள்ளார்கள். அதன் பிறகு குழந்தையும், தாய் சுகந்தியும் திருவாரூரில் உள்ள தனியார் காப்பகத்தில் உள்ளனர்.

Police station
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பரிகாரம் செய்வதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி – கணவன் மனைவி கைது

திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் காவல்துறையினர் இது குறித்து சம்பந்தப்பட்ட மூன்று பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com