திருவண்ணாமலை | ஏரியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆரணி அருகே ஏரியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்புpt desk
Published on

திருவண்ணாமலை மாவட்டம், அடையபலம் கிராமத்தில் குப்புசாமியின் மகன் மோகன்ராஜ், மகள் வர்ஷா மற்றும் விநாயகத்தின் மகள்கள் கார்த்திகா, தனிஷ்கா ஆகிய 4 பேரும், தங்கள் வீட்டின் அருகில் உள்ள ஓடை தாங்கல் ஏரி கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக 4 பேரும் ஏரியில் விழுந்துள்ளனர், நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Death
DeathFile Photo
4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
காலை தலைப்புச் செய்திகள்| ’ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்’ To ’ஆட்சி அமைக்க உரிமை கோரிய அதிஷி’!

உடல்களை மீட்ட அக்கப்பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com