கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் படுகொலைச்செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரை அடுத்துள்ள நெல்லிக்குப்பத்திற்கு உட்பட்ட காராமணி பகுதியில் வசித்து வருபவர் கமலேஸ்வரி. இவர் தனது மகன் சுரேந்திரகுமார் மற்றும் பேரன் நிஷாந்த் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் அவர்கள் வீட்டிலிருந்து சந்தேகத்திற்குரிய வகையில் புகை வெளியேறுவதை கண்ட பக்கத்து வீட்டினர் உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், புகை வந்த வீட்டினை சோதனை செய்த பொழுது அங்கு வசித்து வந்த கமலேஸ்வரி,சுரேந்திரகுமார் மற்றும் நிஷாந்த் மூவரும் படு கொலை செய்யப்பட்டு பாதி எரிந்தநிலையில் அவர்களது உடல் கிடந்துள்ளது. வீடு முழுவதும் இரத்தக்கறை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூவரையும் கொன்றது யார்? எதற்காக? கொலை செய்யப்பட்டனர் என்பதை தெரிந்துக்கொள்ள அப்பகுதி மக்களை போலிசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது.
இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.