சேலம்: மேட்டூர் ஏரியில் மூழ்கி இரு சிறுவர்கள், ஒரு பெண் என மூவர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஏரியில் மூழ்கி 2 சிறார் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஏரியில் மூழ்கி 2 சிறார் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நங்கவள்ளி அருகே உள்ள கொத்திகுட்டை ஏரியில் துணி துவைப்பதற்காக நந்தினி என்பவர் இரண்டு சிறாருடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் மீட்பதற்குள் அவர்கள் உயிரிழந்தனர். காவல்துறையினர், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com