தூத்துக்குடி: நகைக்கடன் தள்ளுபடி எதிரொலி... நகைகளை அடகு வைக்க குவிந்த மக்கள்

தூத்துக்குடி: நகைக்கடன் தள்ளுபடி எதிரொலி... நகைகளை அடகு வைக்க குவிந்த மக்கள்
தூத்துக்குடி: நகைக்கடன் தள்ளுபடி எதிரொலி... நகைகளை அடகு வைக்க குவிந்த மக்கள்
Published on

6 பவுன் தங்க நகைக்கடன் தள்ளுபடி எதிரொலி - நகைகளை அடகு வைக்க குவித்த மக்கள் - டோக்கன் வழங்கியபின் நகைகளை அடகு வைக்க அனுமதிக்காத காரணத்தால் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 6 பவுன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று 6 பவுன் நகை அடகு வைத்தால் 10 நாள்களில் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றுள்ளனர். அப்போது 18 பேருடைய நகைகளை மட்டும் அடகு வைக்க அனுமதித்து விட்டு, மற்றவர்களை நாளைக்கு வரும்படி டோக்கன் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து டோக்கன் வாங்கிய 50க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று தங்கள் நகைகளுடன் கடன் வைக்க சென்றபோது, அந்த சலுகை நேற்றே முடிந்து விட்டது என்று கூறி உள்ளே இருந்த ஊழியர்கள் கதவை அடைத்துவிட்டு வெளியேறியதால், பெண்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள ஊழியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து 6 பவுன் நகைகளை கடன் வைத்து பணம் வழங்கி உள்ளதாகவும், நகை மதிப்பீட்டாளர் இல்லாமலே நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், வெளியூரில் இருந்து வந்த மக்கள் சிலர் நகைகளை அடகு வைத்துள்ளனர். ஆனால் தங்களுக்கு டோக்கன் வழங்கி ஏமாற்றியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஆனால் தள்ளுபடி என்பது அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு தான் வழங்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களிடம் கேட்ட போது நேற்றைய அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஏராளமான மக்கள் நகைகளை அடகு வைக்க வந்ததால் கூட்டம் அதிகமாக அதன் காரணமாகத்தான் டோக்கன்வழங்க்கபட்டது. மக்களுக்கு நகை கடன் தள்ளுபடி என்பது அரசு கூறும் விதிமுறைகளின் படி தான் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com