திருப்போரூர்: குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் பலி; சோகத்தில் மூழ்கிய கிராமம்

திருப்போரூர்: குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் பலி; சோகத்தில் மூழ்கிய கிராமம்
திருப்போரூர்: குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் பலி; சோகத்தில் மூழ்கிய கிராமம்
Published on

திருப்போரூர் அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தில் ஊர் பொது குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊர் பொது குளம் ஒன்று அமைந்துள்ளது. இக்குளத்தில், அதேப்பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் என்பவரின் மகள்கள் ராகிணி(6), ரம்யா(4), இதேபோல், விஜயக்குமார் என்பவரின் மகள் சாதனா(5) ஆகிய 3 சிறுமிகளும் குளிக்க முயன்றபோது ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் முழ்கினர். சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், குளத்தில் இறங்கி மூன்று சிறுமிகளையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக, திருப்போரூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம குளத்தில் முழ்கி மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com