இறந்ததாக நினைத்து புதைக்கச் சென்றபோது உயிர் பிழைத்த குழந்தை

இறந்ததாக நினைத்து புதைக்கச் சென்றபோது உயிர் பிழைத்த குழந்தை
இறந்ததாக நினைத்து புதைக்கச் சென்றபோது உயிர் பிழைத்த குழந்தை
Published on

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்ட குழந்தை அடக்கம் செய்யும்போது உயிர் பிழைத்ததால் அனைவரும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்லை சேர்ந்த குழந்தை ராஜ் என்பவரின் மனைவி மரியவினிதா, பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மரியவினிதாவுக்கு குறைபிரசவத்தில் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை இறந்தே பிறந்ததாக கூறி குழந்தையை தம்பதியிடம் மருத்துவமனை ஊழியர்கள் வழங்கினர். இதையடுத்து மிகுந்த சோகத்துடன் குழந்தையை ‌அடக்கம் செய்ய கல்லறைக்கு கொண்டு சென்றபோது,‌ குழந்தை திடீரென அசைந்து அழத்தொடங்கியது.

கு‌ழந்தை இறந்த வேதனையில் இருந்தவர்களுக்கு அது உயிருடன் இருந்தது தெரிந்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. பின்னர் உடனடியாக குழந்தையை‌ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அத்துடன் உயி‌ருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறிய மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர்‌ சிவக்குமாரிடம் கேட்டதற்கு, இதுவரை எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com