தலைமறைவான கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கைது

தலைமறைவான கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கைது
தலைமறைவான கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கைது
Published on

சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் நாதுராம் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் நகைக்கடை கொள்ளை வழக்கில் கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் போலீசார் தேடி வந்தனர்.

தொடர்ந்து நாதுராம் தலைமறைவாக இருப்பதாக ராஜஸ்தான் போலீசார் கூறி வந்த நிலையில் அவன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஆய்வாளர் பெரியபாண்டியின் கொலைக்குக் காரணமான கொள்ளையனை பிடிக்காமல் ராஜஸ்தான் போலிசார் உலாவ விட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த கொள்ளையன் நாதுராமை குஜராத்தில் ராஜஸ்தான் காவல்துறை கைது செய்துள்ளது. பாலி மாவட்ட எஸ்.பி. தீபக் பார்கவ் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். நாதுராம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவம் குறித்தும், பெரியபாண்டி கொலையில் உள்ள மர்மங்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com