சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது..

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது..
சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது..
Published on

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியவுடன் அணை திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். 

தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 115 அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையின் மொத்த உயரம் 119 அடியாக உள்ள நிலையில், தற்போது நீர்மட்டம் 115 புள்ளி 20 அடியாக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயரும்போது அணை திறக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள ஏரிகள், குளம், குட்டைகள் நிரப்பப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 685 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com