வீட்டிலேயே குடித்த கணவர்... இளம்மனைவி எடுத்த விபரீத முடிவு - ஸ்ரீபெரும்புதூரில் சோகம்

வீட்டிலேயே குடித்த கணவர்... இளம்மனைவி எடுத்த விபரீத முடிவு - ஸ்ரீபெரும்புதூரில் சோகம்
வீட்டிலேயே குடித்த கணவர்... இளம்மனைவி எடுத்த விபரீத முடிவு - ஸ்ரீபெரும்புதூரில் சோகம்
Published on

ஸ்ரீபெரும்புதூர் அருகே நான்காவது மாடியில் இருந்து விழுந்து இளம்பெண் இறந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் கம்பத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் 4-வது மாடியில் வசித்து வருகிறார். ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு இலக்கியா (33) என்ற மனைவியும் 3 1/2 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு தினேஷ் வீட்டில் குடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனால் தினேஷுக்கும் இலக்கியாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நான்காவது மாடியில் இருந்து விழுந்த இலக்கியா சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் இலக்கியாவின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் தள்ளிவிட்டு கொலை செய்தாரா அல்லது தற்கொலையா? என தினேஷை விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com