கிரீமிலேயர் நீக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

கிரீமிலேயர் நீக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
கிரீமிலேயர் நீக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
Published on
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்துவதற்கு ஒன்றிய அரசை தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தும் என்று அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கொள்ளை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்திடவும், பேணி காத்திடவும் அரசு உறுதி பூண்டுள்ளது. ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கும்போது வளமானவர்கள் என (Creamy Layer) நீக்கம் செய்யும் கொள்கையை அரசு எப்போதும் எதிர்த்து வருகிறது.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பண்டித நேரும்,அண்ணல் அம்பேத்காரும் வலியுறுத்தி வந்தவாறு பொருளாதார நிலையை அளவுக்கோலாகக் கருதாமல் சமூக நிலையை மட்டும் கருதி பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் ஒன்றிய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் வழிவகுக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசை தமிழ்நாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளும் என்று கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தபடுவதில்லை என்று தெரிய வருவதாகவும், ஐஐடி, எய்ம்ஸ், ஐஐஎம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக முறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியறுத்தும் என்று கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளில் வழங்கும் இட ஒதுக்கீட்டைபோல தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும் என்று கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பினை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்துவதற்கு ஒன்றிய அரசை தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தும்'' என்று கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: கிரிமிலேயர் என்றால் என்ன ?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com