ராட்சசன், மரகதநாணயம் உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் மரணம் - திரைத்துரையினர் அஞ்சலி

ராட்சசன், மரகதநாணயம் உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்... உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் திரைப்படத்துறையினர் இரங்கல்...
இயக்குனர் டில்லி பாபு
இயக்குனர் டில்லி பாபுபுதியதலைமுறை
Published on

ராட்சசன், மரகதநாணயம் உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்...

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரியின் உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளரான டில்லிபாபு 2015ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், மிரள் மற்றும் கள்வன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். இதில் சில படங்கள் மாபெரும் வரவேற்பினை பெற்றவை .

மேலும் தனது மகனின் நடிப்பில் ’வளையம்’ என்ற ஒரு படத்தினையும் தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு சில மாதங்களாக சிகிச்சையில் இருந்துள்ளார். சிகிச்சை பலனலிக்காமல் இன்று அவர் மரணமடைந்துள்ளார். இவர் வளரும் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பல்வேறு இளம் இயக்குனர்களுக்கு முன் தொகை கொடுத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவரின் இறப்பு திரைப்படத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் திரையுலகினர் பலரும் இவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

"ரொம்ப எளிமையான, தன்மையான மனிதர்'' என்று தயாரிப்பாளர் டில்லிபாபு மறைவுக்கு இயக்குநர் சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com