சிவகார்த்திகேயன் உட்பட 134 பேருக்கு கலைமாமணி விருது வழங்கினார் தமிழக முதல்வர்

சிவகார்த்திகேயன் உட்பட 134 பேருக்கு கலைமாமணி விருது வழங்கினார் தமிழக முதல்வர்
சிவகார்த்திகேயன் உட்பட 134 பேருக்கு கலைமாமணி விருது வழங்கினார் தமிழக முதல்வர்
Published on

சிவகார்த்திகேயன், யோகிபாபு, சரோஜாதேவி உள்ளிட்ட 134 பேருக்கு கலைமாமணி விருதினை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக அரசால் பல்வேறு கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு, கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று  2019, 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுவோர் விபரங்கள் அறிவிக்கப்பட்டது. 

இதன்படி நடிகர் சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா உள்ளிட்ட 128 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதும், மேலும் 6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com