வரதராஜ பெருமாள் கோயிலில் தமிழ் மொழி புறக்கணிப்பு?

வரதராஜ பெருமாள் கோயிலில் தமிழ் மொழி புறக்கணிப்பு?
வரதராஜ பெருமாள் கோயிலில் தமிழ் மொழி புறக்கணிப்பு?
Published on

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் மொழி இல்லாததால் பக்தர்கள் அதிர்ச்சிய‌டைந்துள்ளனர்.

கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், என பல்வேறு கோயில்கள் உள்ள‌ன.அங்கு தமிழகம் மட்டுமின்றி‌‌ ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ‌

இந்நிலையில் தற்போது வரதராஜ பெருமாள் கோயிலில் தமிழ் மொழி‌யை புறக்கணித்து இந்தி,‌ ஆங்கிலம்‌ மற்றும் தெலுங்கு மொழியில் மட்டும் ‌பெயர் பலகை வைக்‌‌கப்பட்டுள்ளதாக‌ தெரிகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள கோயிலிலே ‌தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து பெ‌யர்ப் பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது‌.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com