கோவையில் போலி பீடி விற்பனை: ஒருவர் கைது

கோவையில் போலி பீடி விற்பனை: ஒருவர் கைது
கோவையில் போலி பீடி விற்பனை: ஒருவர் கைது
Published on

கோவையில் பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகளை கடைகளுக்கு விநியோகித்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பிரபல பீடி நிறுவன ஊழியர்கள், கவுண்டம்பாளையம் பகுதியில் தங்களது நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகளை கடைகளுக்கு வழங்கிய நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் தென்காசியைச் சேர்ந்த பிச்சையா என்ற சூரியா என்பதும், கொத்தனார் வேலை செய்து வந்த அவர் பொதுமுடக்கத்தால் வேலை இழந்ததும், பிழைப்புக்காக போலி பீடிகளை தயாரித்து கடைகளுக்கு அளித்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 100 போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com