பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு
பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு
Published on

இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண், சுபஸ்ரீ. பொறியியல் பட்டதாரியான இவர் வீட்டிற்கு ஒரே பிள்ளை, பெற்றோருக்கு செல்லப்பிள்ளை. கந்தன்சாவடியில் உள்ள தனியா‌ர் நிறுவனத்தில் வேலை செய்துவந்த அவர், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பள்ளிக்கரணை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்திருக்கிறது. சுபஸ்ரீ இதை எதிர்பார்க்கவில்லை. நிலைதடுமாறி தவறி விழுந்த அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்தத் துயர சம்பவத்தில், ஒரு பாவமும் அறியாத சுபஸ்ரீயின் உயிர் அநியாயமாக பறிபோனது. பேனர் வைப்பதற்கு முறையான அனுமதி எதுவும் பெறப்படவில்லை என கூறப்படும்நிலையில், விபத்து குறித்து செய்தி வெளியானதும், அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டன. லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இளம்பெண் உயிரிழப்பு விவகாரத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினரும் மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.லாரி ஓட்டுநர் மற்றும் பேனர்கள் வைத்தவர்கள் எனப் பொதுவாகக் குறிப்பிட்டு போக்குவரத்து புலனாய்வு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். இதனிடையே பேனர்கள் அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com