அருண் ஜெட்லிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் சிறைவைப்பு

அருண் ஜெட்லிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் சிறைவைப்பு
அருண் ஜெட்லிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் சிறைவைப்பு
Published on

சென்னை பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி விளக்க கருத்தரங்கம் கூட்ட‌த்தில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிர்ப்பு தெரிவித்த 12 மாணவர்கள் சிறைவைக்கப்பட்டனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கருத்தரங்கக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இக்கூட்டத்திற்கும், மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து 12 மாணவர்களையும் பல்கலைக்கழக நூலகத்தில் காவல்துறையினர் சிறைப்பிடித்து வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com