சிவகங்கை | அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வருகையை ஒட்டி, தூய்மை பணியில் மாணவர்கள்! #ShockingVideo

சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வருகையை ஒட்டி, விளையாட்டு மைதானத்தை தூய்மை செய்யும் பணியில், விடுதி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிக்கான பணியில் மாணவர்கள்
அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிக்கான பணியில் மாணவர்கள்புதிய தலைமுறை
Published on

சிவகங்கையில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய தலைமுறை

இதையொட்டி நேற்று அந்த மைதானத்தை சுத்தம் செய்யும் பணி மற்றும் கம்பு ஊன்றும் பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி படித்து வரும் சில மாணவர்களை ஈடுபடுத்தியுள்ளனர் அங்கிருந்த அதிகாரிகள். மாவட்ட விளையாட்டு விடுதியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிக்கான பணியில் மாணவர்கள்
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பேச்சு - யூடியூப் சேனலில் இருந்து வீடியோ நீக்கம்!

மாணவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பதை அரசு பலமுறை வலியுறுத்தி வரும் போதிலும், அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பணிகளில் மாணவர்களை அதிகாரிகள் ஈடுபடுத்தியது வேதனை அளிப்பதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com