தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் !

தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் !
தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் !
Published on

தள்ளுவண்டி கடையை காவல்துறையினர் அடித்து சேதப்படுத்தியதாக கல்லூரி மாணவர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த அப்தூர் ரகுமான் தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் பகுதி நேரமாக தள்ளுவண்டி கடை வைத்திருந்த இவர், உணவுப் பொருட்களை விற்பனை செய்து வந்தார். கடந்த 8ஆம் தேதி வியாபாரம் முடிந்தபின் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ரகுமானின் தள்ளுவண்டியை, அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். 

அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, அதில் காவல்துறை சீருடை அணிந்த சிலர் வாகனத்தை சேதப்படுத்தும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த அப்தூர் ரகுமான், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com