சிவாஜி சிலையில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சிவாஜி சிலையில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சிவாஜி சிலையில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Published on

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை கல்வெட்டில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவாஜி மணி மண்டபத்தில் இருக்கும் அவரது சிலையின் கல்வெட்டில் இருந்து கருணாநிதியின் பெயரை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஆளும் கட்சியினர் அகற்றியுள்ளதாக திமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். சிலையில் மீண்டும் கல்வெட்டை அமைக்கக் கோரி அக்டோபர் 10-ம் தேதி தமிழக அரசுக்கு மனு அனுப்பியும் அதில் எவ்வித பதிலையும் அளிக்காததால், இந்த விவகாரத்தில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். இதை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, இதுகுறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com