கூட்டணி? | "என்னைய சின்னமனூர்ல கேட்டாக.. மதுரைல கேட்டாக.." - சிரிப்பலையை ஏற்படுத்திய சீமான்!

”என்னுடன் சேர்ந்தால் நாடும் மக்களும் நன்றாக இருப்பார்கள் என நினைத்தால் நீங்கள் வாங்கள். அது யாராக இருந்தாலும் சரி. இல்லையென்றால் விட்டுவிடுங்கள்” சீமான்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நான் யாருடனும் கூட்டணிக்கு போக மாட்டேன். தனித்து தான் போட்டியிடுவேன். என்னைத் தேடி வரும் யாராக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன். என்னைய சின்னமனூர்ல கேட்டாக, மதுரையில கேட்டாக, மயிலாடுதுறைல கேட்டாகன்னு கோவை சரளா பேசுவதுபோல் பேசமாட்டேன். என்னுடன் சேர்ந்தால் நாடும் மக்களும் நன்றாக இருப்பார்கள் என நினைத்தால் நீங்கள் வாங்கள். அது யாராக இருந்தாலும் சரி. இல்லையென்றால் விட்டுவிடுங்கள்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com