மொபைல் சார்ஜர் போடும்போது மின்கசிவு... தீக்காயங்களுடன் காவலாளி மருத்துவமனையில் அனுமதி

மொபைல் சார்ஜர் போடும்போது மின்கசிவு... தீக்காயங்களுடன் காவலாளி மருத்துவமனையில் அனுமதி
மொபைல் சார்ஜர் போடும்போது மின்கசிவு... தீக்காயங்களுடன் காவலாளி மருத்துவமனையில் அனுமதி
Published on

செல்போனுக்கு சார்ஜர் போடும்போது சுவிட்ச் பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில், சுவிட்ச் பாக்ஸில் கைவைத்த காவலாளி தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் புத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (62) என்பவர். சென்னை சூளையில் உள்ள விநாயகா கிராண்ட் பேலஸ் டவர் கல்யாண மண்டபத்தில் கடந்த 4 மாதங்களாக செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக பிள்க் பாயிண்டில் சுவிட்ச் போடும் போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு சுவிட்ச் பாக்ஸ் தீப்பிடித்துள்ளது.

இந்த தீ விபத்தால் ஆறுமுகத்தின் தலை, முகம், கைகள், மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com