கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

வடகிழக்குப் பருவ மழை காரணமாக கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்.29) ஒருநாள் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆற்றங்கரையோரம் வசிப்போர்,  தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர் , பழுதடைந்த வீட்டு கட்டிடங்களில் வசிப்போர், பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com