'என் லவ்வர் கூட பேசக் கூடாது' - நடுரோட்டில் கல்லூரி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை

'என் லவ்வர் கூட பேசக் கூடாது' - நடுரோட்டில் கல்லூரி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை
'என் லவ்வர் கூட பேசக் கூடாது' - நடுரோட்டில் கல்லூரி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை
Published on

சாலையில் கல்லூரி மாணவிகள் முடியை பிடித்து தாக்கி கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை அண்ணாநகர் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறுவதற்காக கல்லூரி மாணவ, மாணவிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் முடியை பிடித்துக்கொண்டு சாலையில் தாக்கி கொண்டனர்.

குறிப்பாக தனது காதலனுடன் ஏன் பேசுகிறாய் எனக்கேட்டு இரு மாணவிகளும் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் அடித்து கொள்வதை அருகிலிருந்த மாணவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.  இந்த வீடியோ வைரலனாதால் சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து  காவல் நிலையத்தில் புகார் வரவில்லை. இதே போல கடந்த டிசம்பர் மாதம் பள்ளி மாணவிகள் கோஷ்டி மோதலில் ஆவடி பேருந்து நிலையத்தில் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சண்டை போட்டதற்காக நண்பனை கடத்திக் கொலை செய்த 13 வயது சிறுவன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com